Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
‘நயன்’தாராவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ‘திரி’ஷா...!
சென்னை: தனது நெருங்கிய தோழியான நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் நடிகை திரிஷா.
நடிகைகள் என்றாலே அவர்களுக்குள் ஈகோ பிரச்சினை இருக்கும் என்ற பரவலான கருத்து உள்ளது. இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால், அவர்களுள் படத்தில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது என்ற விசயத்தில் பெரிய போராட்டமே நடைபெறும்.
ஆனால், இவைகளில் இருந்து வேறுபட்டுள்ளார் நடிகை திரிஷா.
அஞ்சலியுடன் அப்பாடக்கர்...
திரிஷா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக சகலகலா வல்லவன் அப்பாடக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக அஞ்சலியும் நடித்துள்ளார்.
அனுஷ்காவுடன்...
இதேபோல், அஜீத்துடன் திரிஷா சேர்ந்து நடித்த என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவும் நடித்திருந்தார். தற்போது அரண்மனை 2 படத்தில் ஹன்சிகாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார் திரிஷா.
நயன்தாராவுடன்...
இந்நிலையில், எதிர்காலத்தில் இது போல் வேறு எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்க ஆசை என்ற கேள்விக்கு, ‘நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க ஆசை' என திரிஷா பதிலளித்துள்ளார்.
என்னுயிர் தோழி...
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நயன்தாரா என்னுடைய நெருங்கிய தோழி. அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.
வெங்கட்பிரபுவின் முயற்சி...
ஏற்கனவே, என்னையும் நயன்தாராவையும் வைத்து பெண்களை மையப்படுத்தும் கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க வெங்கட் பிரபு முயற்சி செய்தார்' எனத் தெரிவித்துள்ளார்.
நோட் பண்ணிக்கோங்க டைரக்டர்ஸ்...!