கோடியைத் தொட்டார் திரிஷா ஒரு வழியாக கோடி ரூபாயை சம்பளமாகப் பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெயரைப் பெற்று விட்டார் திரிஷா.தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு அதிலும் ஹீரோக்களுக்கு மட்டுமே குண்டக்க மண்டக்க சம்பளம்கொடுப்பது வழக்கம்.அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் நேத்து பிறந்துஇன்றைக்கு நடிக்க வந்த தனுஷ், ஜெயம் ரவி வரை அத்தனை முன்னணி நடிகர்களும் கோடீஸ்வர நடிகர்கள்தான். ஆனால் நடிகைகள் விஷயத்தில் நம்மவர்கள் ரொம்பவே கஞ்சூஸ்கள்!. லட்சாதிபதிகளாக மட்டுமே நடிகைகளைபார்க்கும் வழக்கம் நம்ம ஊர் தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அதிகபட்சம் 50 லட்சம் வரைதான் தருகிறார்கள்.அதற்கு மேல் என்றால் ரொம்பவே யோசிப்பார்கள்.இப்போதைக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக திரிஷா, ஜோதிகா, அசின், நயன்தாரா ஆகியோர்உள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள்.ஆனால் தமிழுக்கு நேர் மாறாக உள்ளது தெலுங்குப் படவுலகம். இங்கே கொடுப்பதை விட இரண்டு மடங்குகொட்டிக் கொடுப்பதால், தமிழில் அறிமுகமாகி பெயர் வாங்கிய நடிகைகள், சட்டுப் புட்டென்று தெலுங்குக்கு ஓடிவிடுகின்றனர். இங்கு 30 லட்சம் சம்பளம் வாங்கும் நாயகிக்கு அங்கு 60 வரை கிடைக்கும். அதுதவிர ஏராளமான சலுகைகளையும்தெலுங்குவாலாக்கள் அள்ளித் தருவதால் பரம சந்தோஷமாக தெலுங்கில் மாட்லாடி கலக்கி வருகிறார்கள்.அந்த வகையில் இங்கிருந்து போனவர் மாமி நடிகை திரிஷா. இங்கேயே அவர் 50 வரை வாங்கிக்கொண்டிருந்தார். தெலுங்குக்குப் போன அவர் அங்கு நடித்த 2 படங்களும் ஹிட் ஆனதால், சம்பளத்தை ஏத்தினார்.எவ்வளவு ஏத்தினாலும் தரத் தயாராக இருக்கும் ஆந்திரவாடுகள், இப்போது திரிஷாவின் சம்பளத்தை 1கோடியாக நிர்ணயித்துள்ளார்களாம். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை அதிக அளவில் சம்பளம்வாங்குவது இதுவே முதல்முறை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை, தமிழிலோ அல்லது வேறு தென்னிந்திய மொழிகளிலோ இந்த அளவுக்குசம்பளமாக இதுவரை பெற்றதில்லை. இதற்கு முன்பு கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் அதிகபட்சமாக 80 லட்சம் வரைதெலுங்குப் படவுலகில் சம்பளமாக பெற்றுள்ளார்.கோடீஸ்வர நடிகை என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் திரிஷா, தொடர்ந்து தெலுங்கில் முன்னணியில்இருந்து வருகிறார். அதேசமயம், தமிழிலும் தனது கிப்பை வலுவாகவே வைத்துள்ளார்.தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வரும் திரிஷா, 3ல் 2 ஹிட் ஆனாலும் உடனே தனது சம்பளத்தைதமிழிலும் ஏற்றி விட முடிவு செய்துள்ளாராம். இருப்பினும் அதிகபட்சம் 70க்கு மேல் போக முடியாது என்கிறார்கள்.நடிகர்களும், நடிகைகளும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கையில், அவர்கள் நடித்த படங்களைப் பார்க்கதியேட்டர்களில் அடித்துப் புரண்டு கொண்டிருக்கிறார்கள் அப்பாவி ரசிகர்கள்.

By Staff

ஒரு வழியாக கோடி ரூபாயை சம்பளமாகப் பெறும் முதல் தமிழ் நடிகை என்ற பெயரைப் பெற்று விட்டார் திரிஷா.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கு அதிலும் ஹீரோக்களுக்கு மட்டுமே குண்டக்க மண்டக்க சம்பளம்கொடுப்பது வழக்கம்.

அன்று முதல் இன்று வரை சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் நேத்து பிறந்துஇன்றைக்கு நடிக்க வந்த தனுஷ், ஜெயம் ரவி வரை அத்தனை முன்னணி நடிகர்களும் கோடீஸ்வர நடிகர்கள்தான்.


ஆனால் நடிகைகள் விஷயத்தில் நம்மவர்கள் ரொம்பவே கஞ்சூஸ்கள்!. லட்சாதிபதிகளாக மட்டுமே நடிகைகளைபார்க்கும் வழக்கம் நம்ம ஊர் தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அதிகபட்சம் 50 லட்சம் வரைதான் தருகிறார்கள்.அதற்கு மேல் என்றால் ரொம்பவே யோசிப்பார்கள்.

இப்போதைக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக திரிஷா, ஜோதிகா, அசின், நயன்தாரா ஆகியோர்உள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50லட்சம் வரை சம்பளமாக தருகிறார்கள்.

ஆனால் தமிழுக்கு நேர் மாறாக உள்ளது தெலுங்குப் படவுலகம். இங்கே கொடுப்பதை விட இரண்டு மடங்குகொட்டிக் கொடுப்பதால், தமிழில் அறிமுகமாகி பெயர் வாங்கிய நடிகைகள், சட்டுப் புட்டென்று தெலுங்குக்கு ஓடிவிடுகின்றனர்.


இங்கு 30 லட்சம் சம்பளம் வாங்கும் நாயகிக்கு அங்கு 60 வரை கிடைக்கும். அதுதவிர ஏராளமான சலுகைகளையும்தெலுங்குவாலாக்கள் அள்ளித் தருவதால் பரம சந்தோஷமாக தெலுங்கில் மாட்லாடி கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் இங்கிருந்து போனவர் மாமி நடிகை திரிஷா. இங்கேயே அவர் 50 வரை வாங்கிக்கொண்டிருந்தார். தெலுங்குக்குப் போன அவர் அங்கு நடித்த 2 படங்களும் ஹிட் ஆனதால், சம்பளத்தை ஏத்தினார்.

எவ்வளவு ஏத்தினாலும் தரத் தயாராக இருக்கும் ஆந்திரவாடுகள், இப்போது திரிஷாவின் சம்பளத்தை 1கோடியாக நிர்ணயித்துள்ளார்களாம். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை அதிக அளவில் சம்பளம்வாங்குவது இதுவே முதல்முறை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகை, தமிழிலோ அல்லது வேறு தென்னிந்திய மொழிகளிலோ இந்த அளவுக்குசம்பளமாக இதுவரை பெற்றதில்லை. இதற்கு முன்பு கனவுக் கன்னி ஸ்ரீதேவி தான் அதிகபட்சமாக 80 லட்சம் வரைதெலுங்குப் படவுலகில் சம்பளமாக பெற்றுள்ளார்.

கோடீஸ்வர நடிகை என்ற அந்தஸ்தை எட்டிப் பிடித்திருக்கும் திரிஷா, தொடர்ந்து தெலுங்கில் முன்னணியில்இருந்து வருகிறார். அதேசமயம், தமிழிலும் தனது கிப்பை வலுவாகவே வைத்துள்ளார்.

தமிழில் தற்போது 3 படங்களில் நடித்து வரும் திரிஷா, 3ல் 2 ஹிட் ஆனாலும் உடனே தனது சம்பளத்தைதமிழிலும் ஏற்றி விட முடிவு செய்துள்ளாராம். இருப்பினும் அதிகபட்சம் 70க்கு மேல் போக முடியாது என்கிறார்கள்.

நடிகர்களும், நடிகைகளும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கையில், அவர்கள் நடித்த படங்களைப் பார்க்கதியேட்டர்களில் அடித்துப் புரண்டு கொண்டிருக்கிறார்கள் அப்பாவி ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X