Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆந்திராவைக் கலக்கும் த்ரிஷா தெலுங்கு உலகில் இன்னொரு நதியாவாகி விட்டார் த்ரிஷா. என்ன புரியவில்லையா? வேறொன்றுமில்லை. இப்போது ஆந்திரயுவதிகள் த்ரிஷா மாடல்களைத் தான் அதிகம் விரும்புகிறார்களாம்.கோலிவுட்டில் கிடைத்த சின்ன சைக்கிள் கேப்பில் நைசாக தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் த்ரிஷா. அங்கு சில படங்கள் ஓட,தெலுங்கிலும் த்ரிஷாவுக்கு மார்க்கெட் எகிற ஆரம்பித்தது. அப்புறமென்ன வழக்கம் போல அமவுண்டையும் ஏற்றிதயாரிப்பாளர்களுக்கு "பல்சையும் கூட்டினார்.படங்கள் ஓடுகிறதே, வேறு என்ன செய்ய என நொந்தவாறு த்ரிஷா கேட்கும் சில, பல லகரங்களுக்கு வேறு வழியில்லாமல்தலையாட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.இப்போது ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் த்ரிஷா அலை தான். ஒரு காலத்தில் நம்மூரில் நதியாவுக்கு ஒரு கிரேஸ் இருந்ததே...அதாவது நதியா வளையல், நதியா கம்மல், நதியா பொட்டு இப்படி வரிசையாக.இதே போலத் தான் ஆந்திராவில் நம்ம த்ரிஷாவுக்கும் கிரேஸ் ஏற்பட்டிருக்கிறதாம். எங்கு பார்த்தாலும் த்ரிஷா அலை தான்.த்ரிஷா டாப்ஸ், த்ரிஷா ஹேண்ட் பேக் என த்ரிஷா மயமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர மங்கைகள்.என்ன, ஆந்திராவையே கலக்கிக் கொண்டிருக்கிறீர்களே என்றோம் த்ரிஷாவிடம். உண்மை தான், சினிமா வாழ்க்கையில் நான்இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறேன். இந்தக் கட்டத்தில் படங்களின் எண்ணிக்கையை விட தரத்திற்குத் தான்முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன்.வருகிற படங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு ஒத்துக் கொண்ட காலம் உண்டு. தவறுகளில் இருந்து தானே நாம் பாடம் கற்றுக்கொள்வோம். இப்போது எனக்கு கதை தான் முக்கியமாகப் படுகிறது.தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்காக தமிழ் படத்தை நான் ஒதுக்கவில்லை. சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன்மாஸ், ஜெயம் ரவியுடன் ஒரு படம் என தமிழில் மூன்று படங்களை ஒத்துக் கொண்டுள்ளேன்.தெலுங்குப் படவுலகிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தினமும் புதுமுகங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் இங்கு நிரந்தரமாக இருக்க முடியாது. ஆனாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டால் வேறு என்ன கவலை என்ற த்ரிஷா, சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால் ஒருடாக்டராகியிருப்பாராம். அதுவும் மனோதத்துவ டாக்டராகி இருப்பாராம்.சரி, என்ன செய்ய முடியும்! மனசை தேத்திக்கிங்க..!
தெலுங்கு உலகில் இன்னொரு நதியாவாகி விட்டார் த்ரிஷா. என்ன புரியவில்லையா? வேறொன்றுமில்லை. இப்போது ஆந்திரயுவதிகள் த்ரிஷா மாடல்களைத் தான் அதிகம் விரும்புகிறார்களாம்.
கோலிவுட்டில் கிடைத்த சின்ன சைக்கிள் கேப்பில் நைசாக தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் த்ரிஷா. அங்கு சில படங்கள் ஓட,தெலுங்கிலும் த்ரிஷாவுக்கு மார்க்கெட் எகிற ஆரம்பித்தது. அப்புறமென்ன வழக்கம் போல அமவுண்டையும் ஏற்றிதயாரிப்பாளர்களுக்கு "பல்சையும் கூட்டினார்.
படங்கள் ஓடுகிறதே, வேறு என்ன செய்ய என நொந்தவாறு த்ரிஷா கேட்கும் சில, பல லகரங்களுக்கு வேறு வழியில்லாமல்தலையாட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இப்போது ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் த்ரிஷா அலை தான். ஒரு காலத்தில் நம்மூரில் நதியாவுக்கு ஒரு கிரேஸ் இருந்ததே...அதாவது நதியா வளையல், நதியா கம்மல், நதியா பொட்டு இப்படி வரிசையாக.
இதே போலத் தான் ஆந்திராவில் நம்ம த்ரிஷாவுக்கும் கிரேஸ் ஏற்பட்டிருக்கிறதாம். எங்கு பார்த்தாலும் த்ரிஷா அலை தான்.த்ரிஷா டாப்ஸ், த்ரிஷா ஹேண்ட் பேக் என த்ரிஷா மயமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர மங்கைகள்.
என்ன, ஆந்திராவையே கலக்கிக் கொண்டிருக்கிறீர்களே என்றோம் த்ரிஷாவிடம். உண்மை தான், சினிமா வாழ்க்கையில் நான்இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறேன். இந்தக் கட்டத்தில் படங்களின் எண்ணிக்கையை விட தரத்திற்குத் தான்முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன்.
வருகிற படங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு ஒத்துக் கொண்ட காலம் உண்டு. தவறுகளில் இருந்து தானே நாம் பாடம் கற்றுக்கொள்வோம். இப்போது எனக்கு கதை தான் முக்கியமாகப் படுகிறது.
தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்காக தமிழ் படத்தை நான் ஒதுக்கவில்லை. சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன்மாஸ், ஜெயம் ரவியுடன் ஒரு படம் என தமிழில் மூன்று படங்களை ஒத்துக் கொண்டுள்ளேன்.
தெலுங்குப் படவுலகிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தினமும் புதுமுகங்கள் வந்து குவிந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் இங்கு நிரந்தரமாக இருக்க முடியாது.
ஆனாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டால் வேறு என்ன கவலை என்ற த்ரிஷா, சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால் ஒருடாக்டராகியிருப்பாராம். அதுவும் மனோதத்துவ டாக்டராகி இருப்பாராம்.
சரி, என்ன செய்ய முடியும்! மனசை தேத்திக்கிங்க..!