கார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை
சென்னை: தன் உடையை கலாய்த்த நபரை விளாசிய ரகுல் ப்ரீத் சிங்கை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அவர் காரில் இருந்து இறங்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஒருவர் மோசமாக கமெண்ட் போட்டுள்ளார்.
அதை பார்த்த ரகுலுக்கு கோபம் வந்துவிட்டது.

ரகுல்
ரகுல் காரில் நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு பேண்ட் போட மறந்துவிட்டார் என்று கூறி நெட்டிசன் ஒருவர் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
உடை
தன்னை பற்றி வந்த ட்வீட்டை பார்த்த ரகுல் பதில் அளித்திருப்பதாவது, உன் அம்மா காரில் அது போன்று நிறைய சம்பவங்கள் செய்ததால் நீங்கள் அதில் நிபுணராக உள்ளீர்கள். அந்த சம்பவ விபரம் மற்றும் புத்தியை கற்றுக் கொடுக்குமாறு அவரிடம் கேட்கவும். இது போன்றவர்கள் இருக்கும் வரை பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. சமத்துவம், பாதுகாப்பு பற்றி விவாதிப்பது மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளார்.
அம்மா
போட்டோ போட்டு கலாய்த்தவர் தான் மோசம் என்றால் தேவையில்லாமல் அவரின் அம்மாவை பற்றி தரக்குறைவாக பேசிய ரகுல் சற்றும் சளைத்தவர் இல்லை என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
எரிச்சல்
அந்த நபரின் ட்வீட்டை பார்த்து கோபம் அடைந்தவர்கள் கூட ரகுலின் பதிலை பார்த்துவிட்டு முகம் சுளித்துள்ளனர். ரகுல் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு மற்றொரு பெண்ணை பற்றி தவறாக பேசியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
பொது இடங்கள்
பொது இடங்களுக்கு இப்படியா உடை அணிந்து வருவது என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











