Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கல்யாணம் முடிந்த 2 நாளிலேயே ஷூட்டிங் போவேன்... 'பருத்திவீரன்' நாயகி பளீச்!
சென்னை : திருமணம் முடிந்த 2வது நாளிலேயே படப்பிடிப்புக்குப் போய் விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியா மணி.
'பருத்திவீரன்', 'மலைக்கோட்டை' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ப்ரியாமணி. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவரும் இவர் நீண்ட நாட்களாக தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
தமிழில் கடைசியாக ஒட்டிப் பிறந்த இரட்டையராக 'சாருலதா' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
23ம் தேதி திருமணம்
இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதியன்று எளிமையான முறையில் நடக்கவுள்ளதாம். அதைத் தொடர்ந்து 24-ம் தேதி பெங்களூருவில் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தென்னிந்தியாவின் சில திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
விவேகமான முடிவு
'இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருடைய மத நம்பிக்கைகளையும் காயப்படுத்தாமல், பதிவுத் திருமணம் செய்ய இருக்கிறோம். இதுதான் விவேகமான முடிவு என இருவருமே தீர்மானித்திருக்கிறோம்' என ப்ரியாமணி தெரிவித்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகும்
'திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா எனும் கேள்விக்கு, 'நான் எனது வேலையைத் தொடர்ந்து ய்வேன். திருமணம், வரவேற்பு முடிந்த இரண்டு நாட்களிலேயே ஷூட்டிங்குக்குப் போகவேண்டியிருக்கிறது.
தொடர்ந்து நடிப்பேன்
அதற்கு அப்புறமும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ப்ரியா மணி. பிரமாதம்தான் போங்க!