Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கல்யாணம் முடிந்த 2 நாளிலேயே ஷூட்டிங் போவேன்... 'பருத்திவீரன்' நாயகி பளீச்!
சென்னை : திருமணம் முடிந்த 2வது நாளிலேயே படப்பிடிப்புக்குப் போய் விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியா மணி.
'பருத்திவீரன்', 'மலைக்கோட்டை' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ப்ரியாமணி. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவரும் இவர் நீண்ட நாட்களாக தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
தமிழில் கடைசியாக ஒட்டிப் பிறந்த இரட்டையராக 'சாருலதா' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
23ம் தேதி திருமணம்
இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதியன்று எளிமையான முறையில் நடக்கவுள்ளதாம். அதைத் தொடர்ந்து 24-ம் தேதி பெங்களூருவில் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தென்னிந்தியாவின் சில திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
விவேகமான முடிவு
'இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருடைய மத நம்பிக்கைகளையும் காயப்படுத்தாமல், பதிவுத் திருமணம் செய்ய இருக்கிறோம். இதுதான் விவேகமான முடிவு என இருவருமே தீர்மானித்திருக்கிறோம்' என ப்ரியாமணி தெரிவித்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகும்
'திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா எனும் கேள்விக்கு, 'நான் எனது வேலையைத் தொடர்ந்து ய்வேன். திருமணம், வரவேற்பு முடிந்த இரண்டு நாட்களிலேயே ஷூட்டிங்குக்குப் போகவேண்டியிருக்கிறது.
தொடர்ந்து நடிப்பேன்
அதற்கு அப்புறமும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ப்ரியா மணி. பிரமாதம்தான் போங்க!