Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
“கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு“ மாளவிகாவா இது?...அடையாளமே தெரியாமல் ஆகிட்டாங்களே!
சென்னை : "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என வளைந்து தெளிந்து ஆட்டம் போட்ட மாளவிகா இப்போது ஆளே அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளார்.
முன்னணி நடிகையான மாளவிகா தமிழில் அஜித்குமார் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
ஆனந்த பூங்காற்றே, வெற்றிகொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா, திருட்டுப்பயலே உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இயக்குநர்கள் செய்த தவறான வேலையால் கடுப்பான பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் தாமரை
மாளவிகா
வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் கருப்பு உடை அணிந்து கொண்டு மிதக்கும் படகில் அம்மணி போட்ட ஆட்டம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இதையடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் நிற புடவை கட்டிக்கொண்டு தன்னுடைய அழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளில் மனதில் விலாங்கு மீனாக துள்ளி குதித்தார்.
துணை நடிகையாக
ஒரு சில படங்களிலேயே ஹீரோயினாக நடித்துள்ள இவர் அதனைத் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் அந்தவகையில் சந்திரமுகி ஐயா வசூல்ராஜா எம்பிபிஎஸ் திருட்டுப்பயலே போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார். 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி படத்தில் கோல்மால் படத்தில் நடித்து வருகிறார்.
திருமணம்
ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா காட்டினார் குடும்பத்துடன் மும்பையில் செட்டிலானார். குழந்தை மற்றும் குடும்பம் என்று வாழ்ந்து வரும் நடிகை மாளவிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஆளே மாறிவிட்டார்
இந்நிலையில், துணிக்கடை ஒன்றில் கறுப்பு நிறத்தில் குட்டி உடையை அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குள் குவிந்து வரும் நிலையில், அட இது மாளவிகா என்றும், ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி குண்டாகிவிட்டாரே என்றும் கேட்டு வருகின்றனர்.
ஆளே மாறிவிட்டார்
இந்நிலையில், மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணிக்கடை ஒன்றில் கறுப்பு நிறத்தில் குட்டி உடையை அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குள் குவிந்து வரும் நிலையில், அட இது மாளவிகா வா? என்றும், ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி குண்டாகிவிட்டாரே என்றும் கேட்டு வருகின்றனர். இருந்தாலும் மாளவிகாவின் தீவிர ரசிகர்கள் சிலர் அவரை வர்ணித்து கவிதை பாடிவருகின்றனர்.