Don't Miss!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அபிஷேக்குடன் மட்டும்தான் நடிப்பேனா? ஐஸ்வர்யா மறுப்பு
அபிசேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னர் விளம்பரம், திரைப்படங்களில் பல நடிகர்களுடன் நடித்து வந்தார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பிறந்த பின்னர் நடிப்பிற்கு இடைவெளி விட்டுள்ள ஐஸ்வர்யா திரைப்பட விழாக்களில் பங்கெடுத்துக் கொண்டார். இதனிடையே முதன் முதலாக நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த நிலையில் இனிமேல் ஐஸ்வர்யா ராய் கணவருடன் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு ஐஸ்வர்யாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவின் இமேஜை குலைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதாக தொலைக்காட்சி ஒன்றிர்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் குழந்தை பிறந்த பின்னர் ஐஸ்வர்யாராய் மீண்டும் புதுப்பொலிவுடன் மாறிவருவதாகவும், அவர் கண்டிப்பாக சிறந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஐஸ்வர்யாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராய் கடைசியாக 2010 ஆம் ஆண்டு குஷாரிஷ் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.