Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?
திருவனந்தபுரம்: டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களிடம் நடிகை ஊர்வசி கெட்ட வார்த்தை பேசியது குறித்து விளக்கம் கேட்டு டிவி சேனலுக்கு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகை ஊர்வசி பிரபல மலையாள டிவி சேனலில் திருமணமான தம்பதிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களிடம் ஊர்வசி குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொஞ்சம் கூட கலாச்சாரம் தெரியாமல் நடந்து கொண்டதாக கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும். ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் ஊர்வசி மற்றும் டிவி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்புயிள்ளது.