Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
என் பெயரில் மோசடி நடக்கிறது - காஜல் அகர்வால் ஆவேசம்
என் பெயரைப் பயன்படுத்தி வணிக விளம்பரங்கள் கொடுத்து சிலர் மோசடி செய்வதாக காஜல் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் கட்டப்பட்ட பெரிய மால் ஒன்றை காஜல் அகர்வால் வந்து திறக்கப் போவதாக ஒரு பெரிய விளம்பரம் வெளியானது.
நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனழ.
இதுபற்றி காஜல் அகர்வால் கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். அப்படி ஒரு விழா நடப்பதே தனக்குத் தெரியாது என்றும் தன்னை அழைக்காமலேயே விளம்பரத்துக்காக தனது பெயரை போலியாக பயன்படுத்தி இருப்பதாகவும் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து காஜல்அகர்வால் கூறுகையில், "வணிக வளாகம் ஒன்றை நான் திறந்து வைப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதுமாதிரி விழாவுக்கு வரும்படி யாரும் என்னை அணுகவில்லை. எனக்கு தெரியாமல் அப்படி விளம்பரம் கொடுத்துள்ளனர். என்னிடம் அமைதி பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இது நேர்மையற்ற செயல். கண்டிக்கத்தக்கதாகும்," என்றார்.