Don't Miss!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆஹா கல்யாணம்.. 'ஆஹாஹாஹாஹா' வாணி கபூர்!
சென்னை: ஆஹா கல்யாணம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த ஹீரோயின் வாணி கபூர் கட்டியிலிருந்த சேலையும், அதையும் மீறி வெளிப்பட்ட கவர்ச்சியும் பார்த்தவர்களை பதற வைத்தது.
சேலையெல்லாம் நல்லாத்தான் கட்டியிருந்தார் வாணி கபூர். ஆனால் படு லூசான ஜாக்கெட்டில் வந்திருந்த அவர் குனிந்தபோதும், நிமிர்ந்தபோதும்தான் அக்கம் பக்கத்தினரை நெளிய வைத்து விட்டார்.
வாணி கபூருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். இது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியில் வெளியான பந்த் பாஜா பாரத் படத்தின் ரீமேக்தான் இது.
சேலை கட்டி.. மல்லிப்பூ வச்சு!
இந்தப் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது படத்தில் பங்கேற்ற அனைவருமே சேலை, வேட்டியில் வந்திருந்தனர். வாணி கபூர் பட்டுச் சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூவுடன் வந்திருந்தார்.
உட்காரும்போது கவனம் தேவையாச்சே..!
ஆனால் ஏதோ சேலையை கவர்ச்சிகரமான உடையாக நினைத்து அணிந்து வந்தாரோ என்னவோ, அவரது சேலைத் தலைப்பு அவ்வப்போது நழுவியபடியே இருந்தது. இதில் லூசான பிளவுஸ் வேறு. உட்காரும் போதும், நிமிரும்போதும், குனியும்போதும், திரும்பும்போதும்.. எல்லோரும் அவரையே உற்றுப் பார்க்கும் அளவுக்கு கவர்ச்சி வெளிப்பட்டபடியே இருந்தது.
'சும்மாவே' சுறுசுறுப்பானவங்க போட்டோகிராபர்கள்
நமது போட்டோகிராபர்கள் வேறு சும்மாவே சுறுசுறுப்பாக இருப்பார்கள்.. வாணி வேறு கவர்ச்சிகரமாக நெளிந்து கொண்டிருந்ததால், அவர்கள் படு சுறுசுறுப்பாக பணியாற்றினர். பிளாஷ்கள் அடிக்கடி பளிச்சிட்டதைக் காண முடிந்தது.
நாணிக் கோணிய நானி
வாணி கபூருக்கு அருகில்தான் நடிகர் நாணி அமர்ந்திருந்தார். அவராலும் கூட வாணி கபூரின் கவர்ச்சி ஷோவை தாங்க முடியவில்லை போல.. அடிக்கடி நெளிந்து கொண்டிருந்தார்.