Don't Miss!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மெசேஜ் அனுப்புவது.. பார்ப்பது பிடிக்காது… வனிதா ஹரிஹரன் பேட்டி!
சென்னை : எனக்கு மெசேஜ் அனுப்பவே பிடிக்காது, அதனால் நான் யார் மெசேஜையும் பார்க்கவே மாட்டேன் என்று வனிதா ஹரிஹரன் கூறியுள்ளார்.
நடிகை வனிதா ஹரிஹரனை நாம் அதிக படியாக நாடகங்களில் பார்த்திருப்போம். இதனை தாண்டி தமிழில் செஞ்சிட்டாலே என் காதல படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வனிதா தந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இவர் தமிழில் தெய்வமகள் நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் மேலும் கல்யாணம் முதல் காதல் வரை. பொன்னூஞ்சல் , பகல் நிலவு மற்றும் தலையணை பூக்கள் ஆகிய நாடகங்களில் நடித்து வருகிறார் .
தற்போது அளித்த நேர்காணலில் நான் மற்றும் கணவர் இருவருமே செல்லபிராணிகள் விரும்பிகள் நான் சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை நான் அதிகமாக பதிவிடுவது செல்லப்பிராணிகள் பற்றி தான் அதிகமாக பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் தனக்கு பிடித்த நடிகை தீபிகா படுகோனே என்று கூறியுள்ள அவர், அவரை ஏன் பிடிக்கும் என்றால், அவர் ரொம்ப சாதாரணமான எதார்த்தமான ஆடைகளை உடுத்துவதால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அவரின் சமூக வலைத்தள பக்கத்தை அடிக்கடி சென்று பார்த்துகொள்வேன் என்றும் கூறினார். முக்கியமாக தீபிகா படுகோனேவின் கன்னக்குழி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் .
மேலும் வெளியில் சொல்லாத அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு முறை தன்னை ஒரு பையன் கிண்டல் செய்து கொண்டே வந்ததாகவும் அவனிடம் ரௌத்திரமாக செருப்பை காட்டினேன், ஆனால் அந்த பையன் செருப்ப தூக்கி கூவத்துல போட்டுடான். அதுக்கப்பறம் ஒத்த செருப்போட வீட்டுக்கு நடந்தே போனேன் என்று நகைச்சுவை ததும்ப கூறினார் .
மேலும் தனக்கு தொலைப்பேசியில் மெசேஜ் அனுப்ப அவ்வளவாக பிடிக்காது, அதனால் நான் யார் மெசேஜையும் பார்க்கவே மாட்டேன். கிட்டதட்ட 83ஆயிரம் மெசேஜை நான் இன்னும் பார்க்கவே இல்லை என்று கூறினார். எனக்கு யாரும் மெசேஜ் பண்ணி தப்பாக நடந்து கொண்டதெல்லாம் கிடையாது. நான் மெசேஜ் பாக்க மாட்டேன் எனக்கு அது பிரச்சினை கிடையாது என்று ஆனந்தமாக கூறினார்.