அதற்குள் 25 படமா.. கலக்கிட்டீங்களே வரலட்சுமி..வாழ்த்துக்கள் !
சென்னை : தமிழ் ரசிகர்களால் மக்கள் செல்வி என்று அன்போடு அழைக்கப்படும் வரலட்சுமி, குறுகிய காலத்திலேயே 25 படங்களில் நடித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார். இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கி சிம்பு நடித்த போடா போடி படத்தில் நடித்தார். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.

இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார். இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

பின்னர் பல படங்களில் நடித்தார், தமிழில் வில்லிகளுக்கான கதாபாத்திரம் குறைவு அதனை பூர்த்தி செய்யும் வகையில் இவர் நடித்த படங்கள் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டில் இவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம் படம் திரைக்கு வரவிருக்கிறது.



Click it and Unblock the Notifications











