Don't Miss!
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்புவுக்கு முத்தம், விஷாலை கொல்லணும், அம்மாவின் சீமந்த சேலை: இது வரலட்சுமி வேலை
Recommended Video
சென்னை: விருது விழாவுக்கு வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவின் சீமந்த சேலையை அணிந்து வந்துள்ளார்.
சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லி நடிகைக்கான விருது வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்டது. வில்லியாக நடித்தால் இமேஜ் பாதிக்கப்படும் என்று கவலைப்படாமல் துணிந்து நெகட்டிவான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் வரலட்சுமி.
அவரின் துணிச்சலுக்கு கிடைத்த விருது தான் இது.
வரலட்சுமி
விருது விழாவுக்கு வரலட்சுமி பட்டுப்புடவை அணிந்து வந்தார். அவரின் அம்மாவின் சீமந்த சேலையாம் அது. வரலட்சுமி வயிற்றில் இருந்தபோது அவர் அம்மா அணிந்த சேலை அது. வில்லிக்கான விருதை தனது அம்மாவுக்கு சமர்பிப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
பெருமை
மகள் வரலட்சுமிக்கு சிறந்த வில்லிக்கான விருது கிடைத்துள்ளதை பார்த்து அப்பா சரத்குமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் மேலும் விருதுகள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று அவர் தனது செல்ல மகளை வாழ்த்தியுள்ளார்.
விஷால்
ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரை கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் என்று விருது விழாவில் வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன், யாராவது ஒருவரை திருமணம் செய்வேன் என்றார்.
காதல்
விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. அதனால் அவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறுவார் என எதிர்பார்த்தால் விஷாலை கொலை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.