Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோயின் ஆன தங்கச்சி ஹீரோயின் ஆவதற்கு இப்போது பொண்ணுங்க ஒரு சூப்பர் ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முதலில் தங்கச்சி, ஹீரோவுக்கு முறைப் பெண் போன்ற குட்டிக் கேரக்டர்களில் அறிமுகமாகிஅப்படியே ஹீரோயினாக பிக்கப் ஆகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா இப்போது தனி நாயகியாகி கலக்கஆரம்பித்துள்ளார். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் வர்ஷினி. இவர் வேறு யாருமல்ல, மதுர படத்தில் விஜய்க்கும், தம்பி படத்தில்மாதவனுக்கும் தங்கச்சியாக நடித்தவர்.தங்கச்சி வேடத்தில் அசத்திய இவரது நடிப்பைப் பார்த்து குஷியாகிப் போன யூனிக் சினிமா பட நிறுவனத்தார்தங்களது புதிய தயாரிப்பான பித்தன் படத்தில் நாயகியாக்கி விட்டனர். வர்ஷினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் அஷ்வாத்தமன் என்ற புதுமுகம்.இதுவரை மொத்தமே 3 படங்களில்தான் நடித்துள்ளார் வர்ஷினி.மூன்றிலுமே தங்கச்சிதான். தம்பி படம் தவிர அகரம் படத்திலும் தங்கச்சியாகியுள்ளார் வர்ஷினி. இரண்டுமே சீக்கிரமே வெளியாகி வர்ஷினிக்கு நல்ல பில்டப்பைக் கொடுக்கப் போகிறது. இதனால், தான்ஹீரோயினாக நடிக்கப் போகும் பித்தன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் எனசந்தோஷமாக கூறுகிறார் வர்ஷினி. சரி திடீர்னு ஹீரோயினாகிட்டீங்களே, கிளாமர்,டான்ஸ் எல்லாம் இருக்குமே, எப்படி சமாளிப்பீங்க என்றுவர்ஷினியிடம் கேட்டால், அதெல்லாம் நான் ரெடியாகத்தான் இருக்கேன்.நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு டான்ஸ் அத்துப்படி. கிளாமர் காட்டாமல் நடிக்க முடியுமா இப்போது?எனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.சரி படத்தின் கதை என்ன தெரியுமா? எல்லோரையும் கிறுக்கர்களாக நினைக்கும் ஒரு பெண், உண்மையிலேயேகிறுக்குத்தனமான ஒரு ஆளிடம் சிக்குகிறாள். அதற்குப் பிறகு அவள் படும் பாடு தான் படத்தின் கதையாம்அய்யய்யோ!
ஹீரோயின் ஆவதற்கு இப்போது பொண்ணுங்க ஒரு சூப்பர் ஷார்ட் கட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது முதலில் தங்கச்சி, ஹீரோவுக்கு முறைப் பெண் போன்ற குட்டிக் கேரக்டர்களில் அறிமுகமாகிஅப்படியே ஹீரோயினாக பிக்கப் ஆகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்த சரண்யா இப்போது தனி நாயகியாகி கலக்கஆரம்பித்துள்ளார்.
அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் வர்ஷினி. இவர் வேறு யாருமல்ல, மதுர படத்தில் விஜய்க்கும், தம்பி படத்தில்மாதவனுக்கும் தங்கச்சியாக நடித்தவர்.
தங்கச்சி வேடத்தில் அசத்திய இவரது நடிப்பைப் பார்த்து குஷியாகிப் போன யூனிக் சினிமா பட நிறுவனத்தார்தங்களது புதிய தயாரிப்பான பித்தன் படத்தில் நாயகியாக்கி விட்டனர்.
வர்ஷினிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் அஷ்வாத்தமன் என்ற புதுமுகம்.
இதுவரை மொத்தமே 3 படங்களில்தான் நடித்துள்ளார் வர்ஷினி.
மூன்றிலுமே தங்கச்சிதான். தம்பி படம் தவிர அகரம் படத்திலும் தங்கச்சியாகியுள்ளார் வர்ஷினி.
இரண்டுமே சீக்கிரமே வெளியாகி வர்ஷினிக்கு நல்ல பில்டப்பைக் கொடுக்கப் போகிறது. இதனால், தான்ஹீரோயினாக நடிக்கப் போகும் பித்தன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் எனசந்தோஷமாக கூறுகிறார் வர்ஷினி.
சரி திடீர்னு ஹீரோயினாகிட்டீங்களே, கிளாமர்,டான்ஸ் எல்லாம் இருக்குமே, எப்படி சமாளிப்பீங்க என்றுவர்ஷினியிடம் கேட்டால், அதெல்லாம் நான் ரெடியாகத்தான் இருக்கேன்.
நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு டான்ஸ் அத்துப்படி. கிளாமர் காட்டாமல் நடிக்க முடியுமா இப்போது?
எனவே டான்ஸ், கிளாமர் என எதாக இருந்தாலும் எனக்கு தோதாகத் தான் இருக்கும். ஸோ, நானும் சீக்கிரமேமுன்னுக்கு வந்து விடுவேன் என படு நம்பிக்கையாக கூறுகிறார் வர்ஷினி.
இப்படத்தில் கிளாமருக்கு வாட்டமாக வண்டார்குழலி பாட்டுப் புகழ் ஸ்மிதாவையும் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இவருக்கு 2 அட்டகாசமான பாட்டையும் ரெடி செய்திருக்கிறார்களாம். குழலியும் போட்டுத் தாக்கத் தயாராகஇருக்கிறாராம்.
சரி படத்தின் கதை என்ன தெரியுமா? எல்லோரையும் கிறுக்கர்களாக நினைக்கும் ஒரு பெண், உண்மையிலேயேகிறுக்குத்தனமான ஒரு ஆளிடம் சிக்குகிறாள்.
அதற்குப் பிறகு அவள் படும் பாடு தான் படத்தின் கதையாம்
அய்யய்யோ!