Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பஞ்சாபி படத்தில் வீணாவின் குத்துப் பாட்டு!!
பஞ்சாபி மொழியில் முதல் முறையாக நடிக்கும் வீணா மாலிக் அங்கு ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம்.
பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு வந்தவர் வீணா மாலிக். இங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பஞ்சாபி மொழிப் படம் ஒன்றிலும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் வீணா.
ஜாட்ஸ் கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக அவர் குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆடிய காட்சியை சமீபத்தில் படமாக்கினார்களாம்.
அடுத்தடுத்து 6 படம்
இந்த ஆண்டு வீணா மாலிக்குக்கு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். காரணம் அவர் மொத்தம் ஆறு பாலிவுட் படங்களில் புக் ஆனதால். அதில் முக்கியமான படமாக அவர் எதிர்பார்ப்பது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்.
பஞ்சாபியில் குத்துப் பாட்டு
தற்போது பஞ்சாபி மொழியில் ஜாட்ஸ் கோல்மால் என்ற படத்தில் நடிக்கும் வீணா மாலிக் அதில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். ஷிட்ஜி செளத்ரி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா பாபர்தான் ஹீரோ.
கவர்ச்சியான சேலை, ரவிக்கையில்
இப்பாடலுக்காக வீணா மாலிக் கவர்ச்சிகரமான காஸ்ட்யூமில் ஆடிப் பாடிய காட்சியை ஷூட் செய்துள்ளனர்.
செம காமெடி
குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இப்போதுதான் பஞ்சாபி குத்துப் பாட்டுக்கு முதல் முறையாகஆடியுள்ளேன். நல்ல வேடிக்கையாக இருந்தது. இப்படி ஒரு பாட்டுக்கு இதுவரை நான் ஆடியதே இல்லை.
இந்தக் குத்துப்பாட்டை சுனிதி செளஹான் பாடியுள்ளாராம்.