காதலிக்கிறேன், ஆனால் திருமணமாகவில்லை: வித்யா பாலன்
யுடிவி நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் ராய் கபூரை காதலிப்பதாக நடிகை வித்யா பாலன் ஒப்புக் கொண்டுள்ளார்.
நடிகை வித்யா பாலனுக்கும், யுடிவி நிறுவனத்தின் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. பினனர் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டு தேன் நிலவுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வந்தது.
நானோ படப்பிடப்புகளில் பிசியாக இருக்கிறேன். என்னைப் போய் காதலிக்கிறாள், கல்யாணம் முடித்து விட்டாள் என்கிறார்களே என்று கேட்டார் வித்யா பாலன். ஒரு வழியாக தற்போது சித்தார் ராய் கபூரை காதலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனக்கு சித்தார்த்தை பிடித்திருக்கிறது. நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். மணப்பெண்ணாக ஆசையாகவும் இருக்கு. ஆனால் எனக்கு ஒன்றும் ரகசியமாக திருமணம் ஆகவில்லை என்றார்.
அன்மையில் வித்யாவும், சித்தார்த்தும் ஜோடியாக கோவா சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக சுற்றிய வித்யாவை பார்த்தவர்கள் தான் அவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்று வதந்ததியை பரப்பினர்.
புது வீடு வாங்கி வித்யாவும், சித்தார்த்தும் அதில் குடியேறவிருக்கின்றனர் என்பது தான் வித்யா பற்றிய லேட்டஸ்ட் வதந்தி.
ஒரு வேளை 'டர்ட்டி பிக்சர்ஸ்' வந்த பிறகு கல்யாணம் செஞ்சுக்குவாங்களோ, என்னவோ...!


Click it and Unblock the Notifications











