குறைந்தது ஹீமோகுளோபின்-3 நாள் மருத்துவமனையில் இருந்த 'சில்க்' வித்யா!
தி டர்ட்டி பிக்சர் படத்திற்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன் உடல் நலக்குறைவால் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க்காக நடிப்பவர் இல்லை வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பாலன். கவர்ச்சியான கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்கும் வித்யாவைப் பார்ப்பவர்கள் தில்லான பொண்ணு தான் என்று வியக்கிறார்கள்.
இந்த படத்திற்காக வித்யா ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது வித்யாவுக்கு சரியான காய்ச்சல். ஆனால் அதை பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தசரா பண்டிகையன்று வித்யா மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பல சோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சோர்வாக இருந்த வித்யாவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. 3 நாட்களுக்குப் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











