Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தேசிய விருதையெல்லாம் திருப்பி கொடுக்க முடியாது - சொல்கிறார் நடிகை வித்யா பாலன்!
மும்பை: நாட்டில் நடக்கும் சம்பவங்களை கண்டித்து தேசிய விருதை விருதை திருப்பி கொடுக்க மாட்டேன் என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் புனே எப்.டி.ஐ.ஐ கல்லூரி மாணவர்கள் விவகாரம் ஆகியவற்றை கண்டித்து திவாகர் பானர்ஜி, ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட 10 சினிமா டைரக்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ‘‘நடக்கும் சம்பவங்களை கண்டித்து நான் தேசிய விருதை திரும்ப கொடுக்க மாட்டேன். இது நாட்டு மக்கள் தான் எனக்கு கொடுத்தார்களே தவிர அரசு அல்ல'' என்று கூறினார்.
மேலும், தன்னுடைய அரசியல் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘‘அரசியலில் சேருவதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவ்வாறு சேர்ந்தால் மோசமான தோல்வியை சந்திப்பேன்'' என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சமூக காரணங்களுக்காக செயல்படுவது ஒருவரது தனிப்பட்ட முடிவு. குறிப்பிட்ட காரணத்துக்காக போராடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றார்.
நடிகை வித்யா பாலனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.