Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டான்ஸ் ஷோவின் நடுவராக இருக்க மறுத்த நடிகை வித்யா பாலன்
மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பது தவிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது, நடுவராக இருப்பது என்று பரபரப்பாக உள்ளனர். அவ்வாறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பெரிய தொகையையும் சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்.
இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தேடி வந்த ஒரு வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
நடுவர்
இந்தி தொலைக்காட்சியில் வரும் பிரபலமான நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்குமாறு வித்யா பாலனை கேட்க அவரோ உடல் நலக்குறைவு காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
ஜலக் திக்லா ஜா
ஜலக் திக் லா என்ற நடன நிகழ்ச்சியின் கடந்த சீசனில் நடிகை மாதுரி தீக்சித் நடுவராக இருந்தார். இம்முறை புதிய நடுவரை நியமிக்க நினைத்து வித்யாவிடம் கேட்டுள்ளனர்.
வித்யா
எனக்கு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்க வாய்ப்பு வந்தபோது எனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று வித்யா தெரிவித்தார்.
படங்கள்
படங்கள், நடிப்பு தான் எனக்கு பிடித்தமானவை. புதிய திறமைசாலிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாக இருந்தால் எனக்கு பிடிக்கும் என்றார் வித்யா.