Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை பறிகொடுத்த வித்யுலேகா.. மோடியிடம் உதவி கேட்டு கோரிக்கை
ஆஸ்திரியா: நடிகை வித்யுலேகா ஆஸ்திரியா நாட்டுக்கு சுற்றுலா சென்று தனது பாஸ்போர்ட்டை இழந்த சம்பவம், கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வித்யுலேகா. வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டுக்கு சுற்றுலா சென்ற வித்யுலேகா தனது பாஸ்போர்ட் முதலானவற்றை இழந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஹோட்டலில்
வித்யுலேகா தங்கியிருந்த ஹோட்டல் லாபியில் தான் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. இதில் பாஸ்போர்ட், பணம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை தான் இழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
பிரதமர்
திருட்டுப்போனதும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வித்யுலேகா சமூக வலைதளம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் இந்தியத் தூதரகத்தை எப்படி தொடர்பு கொள்வது என உதவி கோரினார்.
சிசிடிவி
இதுகுறித்து வித்யுலேகா ''நான் தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவியை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் ஆஸ்திரியா போலீசார் அவற்றை பார்வையிட்டனர். பேக்கைத் திருடியவன் எனது கவனத்தைத் திசைதிருப்பி இந்த திருட்டை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்திய தூதரகம்
எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இந்திய தூதரகம் 2 நாட்கள் தற்காலிக பயணத்திற்கான அனுமதியை வழங்கி எனக்கு உதவி செய்துள்ளது. நண்பர்களுடன் வந்த இந்த சுற்றுலா மிகவும் கசப்பான ஒன்றாக மாறிவிட்டது'' என்று கூறியிருக்கிறார்.