விஜய் சின்சியர், சூர்யா சிங்கம், சிம்பு வாலு, சந்தானம் அய்யய்யோ
சென்னை: ஹன்சிகா தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
இன்றைய தேதியில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அவர் சூர்யாவுடன் நடித்துள்ள சிங்கம் 2 விரைவில் ரிலீஸ் ஆகிறது. பிரியாணி பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் அவர் தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

விஜய்
தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

சூர்யா
சூர்யா எப்படி என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு சிங்கம் என்றார்.

ரவி
எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி நாட்டி(குறும்புத்தனம்) என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு
சிம்பு எப்படிப்பட்டவர் என்று கேட்டதற்கு வாலு என்று பதில் கூறினார் ஹன்சிகா.

ஆர்யா
சேட்டை நாயகன் ஆர்யா என்று கேட்டதற்கு ஃபன்(வேடிக்கையானவர்) என்று ஹன்சிகா தெரிவித்தார்.

சந்தானம்
ஹன்சிகாவின் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானம் பற்றி கேட்டதற்கு அவரின் ரியாக்ஷன் அய்யய்யோ. அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் என்றார்.


Click it and Unblock the Notifications











