விஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்
Recommended Video

சென்னை: வாரிசு நடிகர்களாக இருப்பது எளிது அல்ல என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மூன்று திரையுலகிலும் பணியாற்றும் காஜல் அகர்வால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வாரிசு நடிகர்கள் பற்றி காஜல் அகர்வால் கூறியிருப்பதாவது,

மற்றவர்கள்
சினிமாவில் வாரிசுகளை தவிர மற்றவர்களை ஒதுக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. வாரிசுகளுக்கு முதல் பட வாய்ப்பு தான் எளிதில் கிடைக்கும். ஆனால் அதன் பிறகு அவர்களின் திறமையால் மட்டுமே முன்னேற முடியும்.

திறமை
வாரிசு நடிகர்களாக இருந்தாலும் திறமை இல்லை என்றால் திரையுலகில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு நடிகர்கள் பலரும் கஷ்டப்பட்டு தான் முன்னேறியுள்ளனர். வாரிசு என்பதால் மட்டும் யாருக்கும் எளிதில் வெற்றி கிடைத்துவிடாது.

சூர்யா
விஜய், சூர்யா, கார்த்தி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., நாக சைதன்யா உள்ளிட்ட பல வாரிசு நடிகர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் கடின உழைப்பும், திறமையும் தான் காரணம்.

கஷ்டம்
மற்றவர்களை விட வாரிசு நடிகர்கள் மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அவர்கள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற கூடுதலாக கஷ்டப்பட வேண்டும் என்கிறார் காஜல் அகர்வால்.


Click it and Unblock the Notifications











