twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் விலாசினி சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விலாசினி தலை காட்டுகிறார்.விபச்சார வழக்கில் சிக்கி திசைமாறிப் போனவர் விலாசினி. அதற்கு முன்பும் கூடஅவரது திரையுலக வாழ்க்கை பிரகாசமாக இருந்ததில்லை. பின்னரும் கூட அவர்முன்னேறி விடவில்லை.விபச்சார வழக்கிலிருந்து மீண்டு வந்த அவர் சொந்தக் காசைப் போட்டு கரகாட்டக்காரிஎன்ற படத்தை எடுத்தார். இதில் அந்த கால லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகன்ஹீரோவாக நடித்தார். படம் போண்டியானாலும், பாடல் கேசட் விற்பனை மூலம் காசுபார்த்து விட்டார் விலாசினி.முத்திப் போன உடலும், முறுக்கிக் கொண்ட உடலுமாக ரொம்பவே வயதாகி விட்டதோற்றத்துடன் காணப்படும் விலாசினி இன்னும் தனது கலைத்தாகம் தீராமல்தொடர்ந்து சினிமாவில் உழன்று கொண்டிருக்கிறார்.கரகாட்டக்காரிக்குப் பின்னர் சொந்தப் படம் எடுக்கும் முயற்சிகளை விட்டு விட்டவிலாசினி இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். காதலும் கற்று மற என்றஅந்தப் படத்தில் விலாசினிதான் நாயகி.அவருக்கு ஜோடியாக உதயன் என்பவர் நடித்து வருகிறார். விலாசினியின் கிளாமர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கூடுதல் கிளாமருக்காகபாபிலோனாவும் இருக்கிறார்.ஆணவ வெறி பிடித்து ஆடும் தொழில் அதிபர்களை மயக்கி அவர்களைப் பழிக்குப்பழி வாங்கும் கேரக்டரில் விலாசினி நடிக்கிறார்.பாபிலோனா குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். விலாசினிக்கும்ஒரு டப்பாங்குத்துப் பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படத்திற்குப் பிறகு சொந்தமாக இன்னொரு படம் எடுக்கும் ஐடியாவும்விலாசினியிடம் இருக்கிறதாம்.கை நிறையப் படங்கள் இல்லை, அப்படியிருந்தும் விலாசினியிடம் எப்படித்தான் கைநிறையப் பணம் புரளுகிறதோ என்று கோலிவுட்காரர்கள் ஆச்சரியம் கலந்து புலம்பிவருகிறார்கள்.உங்களுக்கு ஏம்ப்பா...

    By Staff
    |

    சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விலாசினி தலை காட்டுகிறார்.

    விபச்சார வழக்கில் சிக்கி திசைமாறிப் போனவர் விலாசினி. அதற்கு முன்பும் கூடஅவரது திரையுலக வாழ்க்கை பிரகாசமாக இருந்ததில்லை. பின்னரும் கூட அவர்முன்னேறி விடவில்லை.


    விபச்சார வழக்கிலிருந்து மீண்டு வந்த அவர் சொந்தக் காசைப் போட்டு கரகாட்டக்காரிஎன்ற படத்தை எடுத்தார். இதில் அந்த கால லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகன்ஹீரோவாக நடித்தார். படம் போண்டியானாலும், பாடல் கேசட் விற்பனை மூலம் காசுபார்த்து விட்டார் விலாசினி.

    முத்திப் போன உடலும், முறுக்கிக் கொண்ட உடலுமாக ரொம்பவே வயதாகி விட்டதோற்றத்துடன் காணப்படும் விலாசினி இன்னும் தனது கலைத்தாகம் தீராமல்தொடர்ந்து சினிமாவில் உழன்று கொண்டிருக்கிறார்.

    கரகாட்டக்காரிக்குப் பின்னர் சொந்தப் படம் எடுக்கும் முயற்சிகளை விட்டு விட்டவிலாசினி இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். காதலும் கற்று மற என்றஅந்தப் படத்தில் விலாசினிதான் நாயகி.

    அவருக்கு ஜோடியாக உதயன் என்பவர் நடித்து வருகிறார்.

    விலாசினியின் கிளாமர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கூடுதல் கிளாமருக்காகபாபிலோனாவும் இருக்கிறார்.


    ஆணவ வெறி பிடித்து ஆடும் தொழில் அதிபர்களை மயக்கி அவர்களைப் பழிக்குப்பழி வாங்கும் கேரக்டரில் விலாசினி நடிக்கிறார்.

    பாபிலோனா குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். விலாசினிக்கும்ஒரு டப்பாங்குத்துப் பாட்டை வைத்திருக்கிறார்கள்.

    இந்தப் படத்திற்குப் பிறகு சொந்தமாக இன்னொரு படம் எடுக்கும் ஐடியாவும்விலாசினியிடம் இருக்கிறதாம்.

    கை நிறையப் படங்கள் இல்லை, அப்படியிருந்தும் விலாசினியிடம் எப்படித்தான் கைநிறையப் பணம் புரளுகிறதோ என்று கோலிவுட்காரர்கள் ஆச்சரியம் கலந்து புலம்பிவருகிறார்கள்.

    உங்களுக்கு ஏம்ப்பா...

      Read more about: vilasinis kadalum katru mara
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X