ஹீரோயின்
விந்தியாவுக்கு வந்த சோதனையை நினைத்தால் கஷ்டமாக உள்ளது.
அட்டாகசமான ஸ்டரக்டசருடன் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். ஆனால், தாயாரே அவரைவிபச்சாரத்தில் தள்ள நினைத்ததால் வீட்டை விட்டு வெளியேறினார். இப்போது தனது மேனேஜருடன் தனிக்குடித்தனம் (கல்யாணம் எல்லாம் ஆகவில்லை) நடத்தி வருகிறார். இந் நிலையில் உடம்பும் பயங்கரமாக சதைபோட்டுவிட்டது.
இந் நிலையில் துபாய், லண்டனுக்கு கலை நிகழ்ச்சிகளுக்காக நடிகை, நடிகர்கள் செலக்ஷன் நடந்தது. அப்போதுவிந்தியாவை விட்டுவிட்டார்களாம். தன்னைக் கூப்பிடுவார்கள் என காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போனவிந்தியா நடிகர் சங்கத்துக்கு ஓடினார்.
என்னை ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்க கூப்பிடவில்லை என்று கண்ணீருடன் கேட்டார்.
அதற்கு நிர்வாகிகள் தரப்பில்சொல்லப்பட்ட பதில், நீ இப்போவெல்லாம் நடிக்கறதே இல்லையேம்மா என்பது தான். ஆனால், குஷ்புவைஎல்லாம் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருக்கீங்க, அவர் இப்போது சினிமாவில் நடிக்கிறாரா என்று விந்தியாகேட்டுள்ளார்.
அதற்கு குஷ்பு நல்லா டான்ஸ் ஆடும்மா, நீ சரியா ஆடுறதில்லை. உன் உடம்பு வேற ஏகத்துக்கும் ஏறிப் போச்சேஎன்று கூறி வெறுப்பேற்றியுள்ளனர். உடம்பை குறைச்சால் சேத்துப்பீங்களா என்று விந்தியா கேட்க சரிம்மா என்றுபதில் சொன்னார்களாம்.
இதையடுத்து கடும் டயட்டிங்கில் இருந்த விந்தியா உடம்மை ஒரே வாரத்தில் பல கிலோக்கள் குறைத்துவிட்டார்.இதையடுத்து தனக்கு வேண்டிய சில நடிகர்கள் மற்றும் விவேக் உள்ளிட்டவர்களின் ஆதரவையும் திரட்டிக்கொண்டு நடிகர் சங்கத்துக்குச் சென்ற விந்தியா தன்னையும் துபாய், லண்டன் நட்சத்திரக் கலைவிழா நடிகைகள்பட்டியலில் சேர்த்துவிட்டுத் தான் ஓய்ந்தார்.


Click it and Unblock the Notifications











