Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கண்ணா லட்டு தின்ன ஆசையா: திருமண பந்தத்திற்குள் நுழையும் விசாகா சிங்?
சென்னை: நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணமாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிடிச்சிருக்கு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். பிடிச்சிருக்கு படம் காலை வாரினாலும் சில ஆண்டுகள் கழித்து தமிழில் இவர் மீண்டும் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹிட்டடித்தது.
சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் இணைந்து நடித்திருந்த இப்படம் விசாகா சிங்கிற்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வாலிப ராஜா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் பெரியளவில் எடுபடவில்லை.
இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை விசாகா மணம் புரியப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன. விசாகாவின் காதலர் விக்ராந்த் ராவ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றின் விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரிகிறார்.
ரோம் நகரத்தில் பணிபுரியும் விக்ராந்த்-விசாகா இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது. விக்ராந்த் குறித்து விசாகா '' விக்ராந்த் பழகுவதற்கு இனிமையானவர்.எனது காதல் எப்போதோ தொடங்கி விட்டது.
இப்போது மிகவும் ஆழமாக நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் காதல் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அவர் மிகவும் கனிவானவர். அவரை காதலனாக அடைந்தது எனது அதிர்ஷ்டம்.
என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை'' என்று கூறியிருக்கிறார். விரைவில் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.