Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அமலாபாலுக்கு சல்யூட் அடித்த பிரபல நடிகர்!
சென்னை : சமீபத்தில் நடிகை அமலாபால் தன்னை பாலியல் ரீதியாகச் சீண்டிய தொழிலதிபருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்திருந்தார்.
பல நடிகைகள் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும், அமலாபால் தைரியமாக போலீஸ் வரை சென்று அந்த தொழிலதிபரை கைது செய்த வைத்தார்.
தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததற்காக சல்யூட்" எனக் கூறியுள்ளார்.
அமலாபால்
நடிகை அமலாபால், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அமலாபால் போலீசில் ஒருவர் மீது புகார் செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் செய்தார்.
டான்ஸ் நிகழ்ச்சியில் அமலாபால்
மலேசியாவில் நடைபெற இருந்த 'டான்சிங் தமிழச்சி' என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்தார் அமலாபால். இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
டான்ஸ் பயிற்சி
இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் டான்ஸ் ஸ்கூலில் தீவிரமாக நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியான அணுகுமுறையோடு பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தொழிலதிபர் கைது
அந்தத் தொழிலதுபர் மீது பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசனை போலீசார் கைது செய்தனர்.
விஷால் பாராட்டு
தற்போது இது பற்றி பேசியுள்ள நடிகர் விஷால், "பாலியல் தொல்லைக்கு எதிராக தைரியமாக புகார் கொடுத்ததற்காக அமலாபாலுக்கு சல்யூட்" எனக் கூறியுள்ளார். தீவிர நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்த காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது இவரைப் போன்ற மனிதர்களுக்கு பாடமாக இருக்கும் எனவும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.