Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளவில்லை: நடிகை ஸ்வேதா பாசு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தன்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகை ஸ்வேதா பாசு கையும், களவுமாக போலீசாரிடம் சிக்கினார். அவருடன் விபச்சார தரகர், மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலரும் சிக்கினர். ஆனால் அந்த தொழில் அதிபர்களின் பெயரை போலீசார் இன்றுவரை வெளியிடவே இல்லை.
ஸ்வேதா பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் கழித்து காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் கூறுகையில்,
விபச்சாரம்
என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை. எனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.
பத்திரிக்கையாளர்கள்
நான் எதையும் கூறாமல் அவர்களாக எழுதிய பத்திரிக்கையாளர்களை தவிர வேறு யார் மீதும் நான் குறை கூற விரும்பவில்லை. என் விளக்கத்திற்காக மீடியா காத்திருந்திருக்க வேண்டும் என்றார் ஸ்வேதா.
கட்டாயம்
அன்றாட செலவுக்கே பணம் இல்லாததால் சிலரின் தூண்டுதலின் பேரில் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தான் தள்ளப்பட்டதாக ஸ்வேதா தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மறுக்கவில்லை
ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கையும், களவுமாக சிக்கியதை ஸ்வேதா மறுக்கவில்லை.
சமூக வலைதளங்கள்
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வேதாவை ஆளாளுக்கு விமர்சிப்பார்கள். ஆனால் ஆபாச பட நடிகையான சன்னி லியோனைய தலையில் வைத்து கொண்டாடுவார்கள் என்று பலரும் ஃபேஸ்புக்கில் விமர்சித்தனர்.