Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மகள்களுக்காக பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடினேன்..: ஸ்ரீதேவி
மும்பை: சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் நம்ம '16 வயதினிலே' மயிலு, ஸ்ரீதேவி.
அழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'இங்கிலீஷ், விங்கிலீஷ்' படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிரபு தேவாவுடன் நடனமாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ஸ்ரீதேவி. தன் மகள்களின் விருப்பத்திற்காகவே அந்த நடன அரங்கேற்றம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. மேலும், அது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது...
எனக்கு வசதிப்படாது...
நான் பொதுவாக விருது வழங்கும் விழாக்களில் நடனமாடுவது கிடையாது. எனக்கு அது சௌகர்யமான ஒன்றாக இருக்காது.
சின்ன மகளின் ஆர்வம்...
சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது கூட என் மகள்களின் கட்டாயத்தால் தான். அதிலும் எனது இளைய மகள் நான் நடனமாடுவது குறித்து அதிக ஆர்வமாக இருந்தாள்.
ஆடலாம் பாய்ச்... சின்னதா ஒரு டான்ஸ்...
நானும் ‘அதென்ன பிரமாதம். ஆடினால் போயிற்று' என பிரபு தேவாவுடன் நடனம் ஆடினேன்.
அப்போ குழந்தைகள்...
நான் இதுபோன்று மேடைகளில் நடனமாடுவதை பார்ப்பது இது தான் அவர்களுக்கு முதல் முறை. இதற்கு முன் நான் இது போன்று மேடைகளில் நடனமாடிய போது அவர்கள் மிகவும் சிறிய குழந்தைகள்' எனத் தெரிவித்துள்ளார்.
கணவர் அமைவதெல்லாம்....
மேலும், தன் கணவர் போனி பற்றி கூறும் போது, ‘ போனிஜி போன்ற கணவர் அமைய நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என நெகிழ்ந்து கூறியுள்ளார் ஸ்ரீதேவி.