ச்ச்ச்சீ, இந்த நடிகை ஆலியா பட் ஸ்கூல் டாய்லெட்டில் போய்....
மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பள்ளியில் படிக்கும் காலத்தில் கழிவறையில் போய் தூங்கி ஆசிரியரிடம் தண்டனை பெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் ஷாருக்கானுடன் சேர்ந்து டியர் ஜிந்தகி படத்தில் நடித்துள்ளார். தற்போது பத்ரிநாத் கி துல்ஹனியா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
23 வயதே ஆகியுள்ள ஆலியா பல வகையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

டியர் ஜிந்தகி
ஸ்ரீதேவியை வைத்து இங்கிலிஷ் விங்கிலிஷ் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கவுரி ஷிண்டே தான் டியர் ஜிந்தகி படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி
பள்ளி காலம் பற்றி ஆலியா கூறுகையில், நான் பள்ளியில் படித்தபோது கழிப்பறையில் தூங்கும் பழக்கம் இருந்தது. வகுப்பை கட்டடித்து விட்டு நான் கழிப்பறையில் ஜாலியாக தூங்குவேன் என்றார்.

தண்டனை
என்னடா இந்த ஆலியாவை வகுப்பறையில் காணவில்லையே என ஒரு நாள் ஆசிரியை என்னை தேடி கழிப்பறைக்கே வந்துவிட்டார். நான் அங்கு தூங்கிய விஷயத்தை தெரிந்து கொண்ட அவர் எனக்கு தண்டனை கொடுத்தார் என்று ஆலியா தெரிவித்தார்.

பெஞ்ச்
கழிப்பறையில் தூங்கியதால் ஒரு வாரம் என்னை வகுப்பறையில் உள்ள பெஞ்சை துடைக்க வைத்துவிட்டார் ஆசிரியை. அதனால் மாணவ, மாணவிகள் என்னை போன்று இல்லாமல் வீட்டில் தூங்குங்கள் என்றார் ஆலியா பட்.


Click it and Unblock the Notifications











