ப்ரியங்கா சோப்ராவுக்கு வருங்கால மாமனார்-மாமியார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
Recommended Video

மும்பை: நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு அவரின் வருங்கால மாமனார்-மாமியார் என்ன பரிசு அளித்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அவரின் காதலரான அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸுக்கும் நேற்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நிக்கின் பெற்றோரான பால் கெவின் ஜோனஸ் மற்றும் டெனிஸ் மில்லர் ஜோனஸ் கலந்து கொண்டனர்.
பாலும், டெனிஸும் ப்ரியங்காவுக்காக அமெரிக்காவில் இருந்து நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தனர். அதில் முக்கியமானது அவர்கள் ப்ரியங்காவுக்கு அளித்த டிஃபனி வைர பிரேஸ்லெட்.
நிக் ப்ரியங்காவுக்காக ரூ. 1.4 கோடி மதிப்புள்ள டிஃபனி வைர மோதிரத்தை நிச்சயதார்த்தம் நடந்ததன் அடையாளமாக அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரியங்காவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.


Click it and Unblock the Notifications











