Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தியா கல்யாணம் என்னாச்சு?
அழகுப் பெட்டகமாக தமிழ் சினிமாவுக்கு வந்த நாயகியரிடம் தியாவும் ஒருவர். நல்ல அழகு, வாளிப்பான கவர்ச்சி என எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்த தியாவுக்கு வாய்ப்புகள்தான் சரிவர வரவில்லை.
அங்கும் இங்குமாக ஓரிரு படங்களில் தலை காட்டி வந்தார். கோடம்பாக்கம் படத்தில் அமைதியான நடிப்பாலும், ஆபாசம் கலக்காத அழகாலும் கவர்ந்தார்.
அந்த சமயத்தில்தான் காதலிலும் விழுந்தார். கப்பல் கேப்டன் ஒருவருடன் காதல் கொண்ட தியா, பேசாமல் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விடத் தீர்மானித்தார்.
இதனால் புதிய வாய்ப்புகளை நிராகரித்த அவர் கையில் இருந்த ஓரிரு படங்களையும் வேகமாக முடித்துக் கொடுத்து விட்டு காதலருடன் கல்யாணத்திற்குத் தயாரானார்.
இந்த நிலையில்தான் காதலர் தரப்பிலிருந்து கல்யாணத்திற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தியாவை மணக்க காதலரின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போதைக்கு அமைதி காப்போம், பிறகு சம்மதம் வாங்கி விட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றார் காதலர்.
இருந்தாலும் பிடிப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் காதலர் கை நழுவிப் போய் விடுவாரோ என்று பயந்த தியா, காதலருடன் வீடு எடுத்து குடித்தனத்தை ஆரம்பித்தார்.
கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அதிரடித் திருப்பமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். இந்த நிமிடம் வரை காதலர் குடும்பத்திலிருந்து பச்சைக் கொடி வரவே இல்லையாம். இதற்கு மேலும் இருவரும் சேர்ந்து வசிப்பது சரியாக இருக்காது. பிரிந்து விடலாம் என்று காதலர் கூறி விட்டாராம்.
காதல் கல்யாணத்தில் முடியாமலேயே பிரிவு பட்டுப் போனதை எண்ணி பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் தியா.
வருத்தம் கரைந்து மீண்டும் அவர் நடிக்க வந்தாலும் வரலாம் என்று கோடம்பாக்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!