அம்மா கடும்கோபத்தில் இருப்பதால் ஸ்ரேயா இப்படி செய்துவிட்டாரா?
மும்பை: நடிகை ஸ்ரேயா நல்ல காரியத்தை இப்படி ரகசியமாக செய்துள்ளது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வந்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை ரகசியமாக காதலித்து வந்தார்.
காதலை போன்றே கல்யாணத்தையும் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக செய்துள்ளார்.

தேதிகள்
ஸ்ரேயாவின் திருமணம் 16, 17 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் 12ம் தேதியை மும்பையில் உள்ள தனது வீட்டில் இந்து முறைப்படி காதலரை ரகசிய திருமணம் செய்துள்ளார்.

அதிருப்தி
ஸ்ரேயா நல்ல காரியமான திருமணத்தை ஏதோ செய்யக் கூடாத விஷயத்தை செய்தது போன்று ரகசியமாக செய்தது அவரின் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

ஸ்ரேயா
காதலரை திருமணம் செய்கிறேன் என்று ரசிகர்களுக்கும், உடன் வேலை செய்பவர்களுக்கும் சொல்லிவிட்டு செய்தால் என்ன. ஏன் இப்படி ரகசியமாக செய்ய வேண்டும். திருமணம் செய்வது ஒன்றும் பெரிய குற்றம் இல்லையே என்று ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

ஃபேஷன்
திரையுலகை சேர்ந்தவர்கள் ஒரு தேதியை அறிவித்து அதற்கு முன்பே ரகசிய திருமணம் செய்வது ஃபேஷனாகிவிட்டது. ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் தான் ரகசிய திருமணம் செய்துள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











