Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அம்மா கடும்கோபத்தில் இருப்பதால் ஸ்ரேயா இப்படி செய்துவிட்டாரா?
மும்பை: நடிகை ஸ்ரேயா நல்ல காரியத்தை இப்படி ரகசியமாக செய்துள்ளது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வந்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை ரகசியமாக காதலித்து வந்தார்.
காதலை போன்றே கல்யாணத்தையும் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக செய்துள்ளார்.
தேதிகள்
ஸ்ரேயாவின் திருமணம் 16, 17 ஆகிய தேதிகளில் ராஜஸ்தானில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் 12ம் தேதியை மும்பையில் உள்ள தனது வீட்டில் இந்து முறைப்படி காதலரை ரகசிய திருமணம் செய்துள்ளார்.
அதிருப்தி
ஸ்ரேயா நல்ல காரியமான திருமணத்தை ஏதோ செய்யக் கூடாத விஷயத்தை செய்தது போன்று ரகசியமாக செய்தது அவரின் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
ஸ்ரேயா
காதலரை திருமணம் செய்கிறேன் என்று ரசிகர்களுக்கும், உடன் வேலை செய்பவர்களுக்கும் சொல்லிவிட்டு செய்தால் என்ன. ஏன் இப்படி ரகசியமாக செய்ய வேண்டும். திருமணம் செய்வது ஒன்றும் பெரிய குற்றம் இல்லையே என்று ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.
ஃபேஷன்
திரையுலகை சேர்ந்தவர்கள் ஒரு தேதியை அறிவித்து அதற்கு முன்பே ரகசிய திருமணம் செய்வது ஃபேஷனாகிவிட்டது. ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் தான் ரகசிய திருமணம் செய்துள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.