கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?
சென்னை: கீர்த்தி சுரேஷ் கேரவனுக்குள் சென்றால் வெளியே வருவதற்கு ஏன் வெகுநேரம் ஆகிறது என்பது தெரிய வந்துள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். விஜய்யை அடுத்து சூர்யா ஜோடியாக தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்துள்ளார்.
கார்த்தியுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம் என்று பிசியாக உள்ளார்.

பவன் கல்யாண்
தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி. தெலுங்கில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று சீனியர் ஹீரோ படமானாலும் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

கேரவன்
கீர்த்தி கேரவனுக்குள் சென்றால் வெளியே வர நேரமாவதாக கூறப்படுகிறது. கேரவனுக்குள் அவர் அப்படி என்ன செய்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மேனகா
கேரவனில் இருக்கும் தனது அம்மா மேனகாவுக்கு முன்னால் தான் நடிக்க உள்ள காட்சிக்கு ஒத்திகை பார்க்கிறாராம். ஒத்திகை பார்க்கத் தான் அவ்வளவு நேரமாம்.

ஒத்திகை
கீர்த்தி என்ன தான் நடித்தாலும் அவரின் நடிப்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஓவராக கலாய்க்கிறார்கள். இந்நிலையில் தான் அவர் ஒத்திகை பார்த்து நடிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











