விஜய், கார்த்தி பட நடிகையை அழ வைத்த இயக்குநர்
Recommended Video
சென்னை: ரஷ்மிகா மந்தனாவை இயக்குநர் அழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் டோலிவுட்டில் பிரபலமானவர் ரஷ்மிகா மந்தனா. மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை தெரிவித்தார்.

ரஷ்மிகா
நான் கீத கோவிந்தம் படத்தில் நடித்தபோது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு கொஞ்சம் தாமதமாக சென்றேன். செட்டிற்கு சென்றால் யாருமே என்னுடன் பேசவில்லை. எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. ஒரு நாள் தானே லேட்டாக வந்தோம். ஏன் யாருமே பேச மாட்டேன் என்கிறார்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றார் ரஷ்மிகா.

அழுகை
செட்டில் இருந்தவர்கள் யாரும் பேசாததால் அப்செட் ஆகி நான் அழத் துவங்கிவிட்டேன். இதை பார்த்த இயக்குநர் பரசுராம் என்னிடம் வந்து, இயற்கையாகவே உங்களின் சோக உணர்வுகளை படம் பிடிக்க நினைத்து இப்படி ஒரு கேம் ஆடினோம் என்றார் என ரஷ்மிகா தெரிவித்தார்.

அகில் அகினேனி
பொம்மரில்லு படம் புகழ் பாஸ்கர் நாகர்ஜுனா, அமலா தம்பதியின் மகன் அகிலை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார். அதில் அகிலுக்கு ஜோடியாக ரஷ்மிகா நடிக்க உள்ளாராம். இந்த படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

கோலிவுட்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கார்த்தி 19 படத்தின் ஹீரோயின் ரஷ்மிகா மந்தனா தான். இது தான் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











