Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் முதல் கணவரிடம் அனுபவித்த சித்ரவதைகள் இருக்கே... அதை விவரிக்கவே முடியாது.. ஹீரோயின் பகீர் புகார்
கொச்சி: என் முதல் கணவரிடம் நான் அனுபவித்த சித்திரவதைகள் கொடுமையானது என்று நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.
இவர், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில படங்களில் நடித்துவருகிறார்.
திருமணம், விவாகரத்து
இவர், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு திடீரென விவாகரத்துப் பெற்றார். இதையடுத்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். இதுவும் நீடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அரிஹா என்ற மகன் உள்ளார்.
மானேஜர்தான்
இந்நிலையில், மலையாள சினிமாவில், தான் நல்ல நிலைக்கு வராததற்கு தனது மானேஜர்தான் காரணம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மறக்க நினைக்கிற விஷயங்களில் திருமணமும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
பெண்களைத்தான்
அவர் கூறும்போது, என் திருமணம் பற்றி மீண்டும் பேச விரும்பவில்லை. ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல முடியும். ஒரு திருமணம் முறிந்து, விவாகரத்து வரை சென்றுவிட்டால் பெண்களைத்தான் சமூகம் குற்றம் சுமத்துகிறது. ஆனால் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை.
சித்திரவதை
நான் என் முதல் திருமணத்தின்போது, அந்த கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல சித்திரவதைகளை அனுபவித்தேன். அது விவரிக்க முடியாதது. அந்த நேரத்தில், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பை நாடினேன். 2012 ஆம் வருடம் மறுமணம் செய்துகொண்டேன். அந்தத் திருமணமும் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவருடனும் மனரீதியாகப் பழக முடியவில்லை. இதனால் அந்த திருமணமும் தொடரவில்லை. விவகாரத்தில் முடிந்தது என்று கூறியுள்ளார்.