Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மார்பகங்களை பெரிதாக்கினால் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள்: தீபிகா
Recommended Video
மும்பை: நடிக்க வந்த புதிதில் தன்னுடைய மார்பகத்தை பெரிதாக ஆக்கிக் கொள்ளுமாறு பலர் வலியுறுத்தியதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் தீபிகா படுகோனே. ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார். ஆனால் ப்ரியங்கா சோப்ரா போன்று அவரால் ஹாலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை.
இதையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா பற்றி தீபிகா கூறியதாவது,
அறிவுரை
நான் நடிக்க வந்த புதிதில் செயற்கை முறையில் எனது மார்பகங்களை பெரிதாக்குமாறு பலர் அறிவுரை வழங்கினார்கள். பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றார்கள்.
ராம்ப் வாக்
ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தால் பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள். பட வாய்ப்புக்காக நான் என் மார்பகங்களை பெரிதாக்க விரும்பவில்லை.
மாற்றம்
மார்பகம் மட்டும் இல்லை பல விஷயங்களை செயற்கையாக மாற்றுமாறு எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. என் திறமைக்காக தான் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே தவிர நான் செயற்கையாக என் உடலில் மாற்றம் செய்வதற்காக அல்ல என்பதில் தெளிவாக இருந்தேன்.
தற்கொலை
நான் மனஅழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு குணமடைந்தேன். மனஅழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் தற்கொலை செய்யத் தோன்றும். நல்ல வேளை எனக்கு மனஅழுத்தம் இருந்தது ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிறார் தீபிகா.