Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஷூட்டிங்கின்போது ஹீரோவை அண்ணா அண்ணான்னு அழைத்த ஹீரோயின்
சென்னை: பஞ்சுமிட்டாய் பட ஹீரோ மா.கா.பா. ஆனந்தை அண்ணா அண்ணா என்று அழைத்துள்ளார் ஹீரோயின் நிகிலா விமல்.
கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர். அவர் பஞ்சுமிட்டாய் படத்தில் மா.கா.பா. ஆனந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகையில்,
எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது. நடிக்க வந்த புதிதில் தமிழும் சரியாக பேசத் தெரியாது. நான் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ ஆனந்தை அண்ணா என்று அழைத்தேன். ஹீரோவை அண்ணா என்று அழைக்கக் கூடாது என எனக்கு தெரியாது.
அதன் பிறகு படக்குழுவினர் என்னிடம் கூறினார்கள். ஹீரோவை சார் என்று கூப்பிடுங்கள் அல்லது பெயரை சொல்லி கூப்பிடுங்கள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
நான் பட யூனிட்டில் இருந்த அனைத்து ஆண்களையுமே அண்ணா என்று தான் அழைத்தேன் என்றார்.