ஷூட்டிங்கின்போது ஹீரோவை அண்ணா அண்ணான்னு அழைத்த ஹீரோயின்
சென்னை: பஞ்சுமிட்டாய் பட ஹீரோ மா.கா.பா. ஆனந்தை அண்ணா அண்ணா என்று அழைத்துள்ளார் ஹீரோயின் நிகிலா விமல்.
கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர். அவர் பஞ்சுமிட்டாய் படத்தில் மா.கா.பா. ஆனந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகையில்,

எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது. நடிக்க வந்த புதிதில் தமிழும் சரியாக பேசத் தெரியாது. நான் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ ஆனந்தை அண்ணா என்று அழைத்தேன். ஹீரோவை அண்ணா என்று அழைக்கக் கூடாது என எனக்கு தெரியாது.

அதன் பிறகு படக்குழுவினர் என்னிடம் கூறினார்கள். ஹீரோவை சார் என்று கூப்பிடுங்கள் அல்லது பெயரை சொல்லி கூப்பிடுங்கள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
நான் பட யூனிட்டில் இருந்த அனைத்து ஆண்களையுமே அண்ணா என்று தான் அழைத்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications











