Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ஷூட்டிங்கின்போது ஹீரோவை அண்ணா அண்ணான்னு அழைத்த ஹீரோயின்
சென்னை: பஞ்சுமிட்டாய் பட ஹீரோ மா.கா.பா. ஆனந்தை அண்ணா அண்ணா என்று அழைத்துள்ளார் ஹீரோயின் நிகிலா விமல்.
கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர். அவர் பஞ்சுமிட்டாய் படத்தில் மா.கா.பா. ஆனந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகையில்,
எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது. நடிக்க வந்த புதிதில் தமிழும் சரியாக பேசத் தெரியாது. நான் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ ஆனந்தை அண்ணா என்று அழைத்தேன். ஹீரோவை அண்ணா என்று அழைக்கக் கூடாது என எனக்கு தெரியாது.
அதன் பிறகு படக்குழுவினர் என்னிடம் கூறினார்கள். ஹீரோவை சார் என்று கூப்பிடுங்கள் அல்லது பெயரை சொல்லி கூப்பிடுங்கள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
நான் பட யூனிட்டில் இருந்த அனைத்து ஆண்களையுமே அண்ணா என்று தான் அழைத்தேன் என்றார்.