Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷூட்டிங்கின்போது ஹீரோவை அண்ணா அண்ணான்னு அழைத்த ஹீரோயின்
சென்னை: பஞ்சுமிட்டாய் பட ஹீரோ மா.கா.பா. ஆனந்தை அண்ணா அண்ணா என்று அழைத்துள்ளார் ஹீரோயின் நிகிலா விமல்.
கேரளாவை சேர்ந்தவர் நிகிலா விமல். கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர். அவர் பஞ்சுமிட்டாய் படத்தில் மா.கா.பா. ஆனந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகையில்,
எனக்கு தமிழ் திரையுலகம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது. நடிக்க வந்த புதிதில் தமிழும் சரியாக பேசத் தெரியாது. நான் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ ஆனந்தை அண்ணா என்று அழைத்தேன். ஹீரோவை அண்ணா என்று அழைக்கக் கூடாது என எனக்கு தெரியாது.
அதன் பிறகு படக்குழுவினர் என்னிடம் கூறினார்கள். ஹீரோவை சார் என்று கூப்பிடுங்கள் அல்லது பெயரை சொல்லி கூப்பிடுங்கள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
நான் பட யூனிட்டில் இருந்த அனைத்து ஆண்களையுமே அண்ணா என்று தான் அழைத்தேன் என்றார்.