Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நான் முதல்வரானால் முதலில் இவங்களைதான் காலி பண்ணுவேன்.. மிரட்டும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: தான் முதல்வரானால் பத்திரிக்கை மோசடிகளைதான் முதலில் ஒழிப்பேன் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அழகிப் போட்டி, ஜோடி நம்பர் ஒன், பிக்பாஸ் என அவர் பங்கேற்கும் எல்லாமே சர்ச்சையில்தான் முடிகிறது.
தானா சேர்ந்த கூட்டம் உட்பட ஓரிரு படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அம்மாவிடம் சொன்னதை செய்து காட்டி விட்டேன்.. இயக்குனர் ஹலிதா ஷமீம் நெகிழ்ச்சி !
திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழகம் முழுக்க பெரும் பிரபலமான மீரா மிதுன், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கவர்ச்சி பொங்கும் அவரது போட்டோக்களை பார்த்து எவ்வளவுதான் நெட்டிசன்கள் திட்டி தீர்த்தாலும் கேர் பண்ணுவதில்லை மீரா மிதுன்.
பிரதமர் மோடிக்கு கோரிக்கை
சமீப காலமாய் அரசியல் பேசி வரும் மீரா மிதுன், தமிழக அரசையும் அமைச்சர்களையும் சாடி வருகிறார். தான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கூறி வருகிறார். தமிழக அரசை கலைத்துவிட்டு தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும் கோரிக்கை விடுத்து வருகிறார்.
நான் முதல்வரானால்
அதோடு எந்த பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடிக்கே டேக் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன், மீண்டும் முதல்வர் ஆசையை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டியுள்ளார். அதில், நான் முதல்வராக ஆகும்போது, முதலில் நான் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவேன்
வாஷ் அவுட் செய்வேன்
தமிழகத்தில் உள்ள பத்திரிகை மோசடிகளை வாஷ் அவுட் செய்து சரியான செய்தி பொதுமக்களுக்கும் சமூகத்திற்கும் கிடைப்பதை உறுதிசெய்வேன், ஒரு தன்னலமற்ற இளம் அமைச்சரவையை உருவாக்குவேன், ஸ்டாக்மணியை விரும்பும் வயதானவர்கள் அல்ல என தெரிவித்திருக்கிறார்.