Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலை சொன்ன நடிகர்: லூசா நீ என்று கேட்ட வாரிசு நடிகை
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தன் காதலை சொன்னதும் பைத்தியமா என்று கேட்டுள்ளார் நடிகை கரீனா கபூர்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானும், நடிகை கரீனா கபூரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு 2 வயதில் தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கரீனா கபூர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
சயிப் அலி கான்
தஷான் படத்தின் ஷூட்டிங்கிற்காக நாங்கள் கிரீஸ் சென்றிருந்தோம். அங்கு ஒரு பாடலை படமாக்கினார்கள். ஒரு நாள் காலை எழுந்தவுடன் நாம் திருமணம் செய்து கொள்ளலாம். நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று சயிப் அலி கான் என்னிடம் தெரிவித்தார்.
கிரீஸ்
கிரீஸிலேயே திருமணம் செய்யலாம். உடனே ஒரு தேவாலயத்திற்கு சென்று திருமணம் செய்யலாம் என்றார் சயிப். உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று நான் கேட்டேன். அதற்கு அவரோ அதெல்லாம் தெரியாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று மட்டும் கூறினார்.
விவாகரத்து
சயிப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர், 2 பிள்ளைகளுக்கு தந்தை என்பதால் அவரை திருமணம் செய்ய நான் தயங்கவில்லை. என் குழந்தைகள் தான் என் குடும்பம். அவர்கள் என்னுடன் தான் இருப்பார்கள். எனக்கு மிகவும் முக்கியமானவர்கள் அவர்கள் தான் என்று சயிப் என்னிடம் ஏற்கனவே கூறிவிட்டார்.
சிறப்பு
நான் சயிபை தீவிரமாக காதலித்தேன், காதலிக்கிறேன், காதலிப்பேன். அவர் மீதான காதல் மட்டும் என்றுமே குறையாது. நான் அவரை திருமணம் செய்தது தான் என் வாழ்வில் நான் எடுத்த சிறந்த முடிவு என்று கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.