Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பட தயாரிப்பாளரை பத்திரிகையாளர்கள் முன்பு அழ வைத்த டாப்ஸி
மும்பை: பிங்க் பட செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகை டாப்ஸி செய்த ஒரு செயலால் தயாரிப்பாளர் ஷூஜித் சர்கார் அழுதுவிட்டார்.
அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள பிங்க் இந்தி படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 16ம் தேதி வெளியான படம் இதுவரை ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
பிங்க்
பிங்க் படம் டாப்ஸி உள்ளிட்ட 3 பெண்களை சுற்றியே நகரும். இந்நிலையில் படம் வெற்றி பெற்றதையடுத்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
டாப்ஸி
பத்திரிகையாளர் சந்திப்பின்போது டாப்ஸி படத்தின் தயாரிப்பாளர் ஷூஜித் சர்காரை பார்த்து எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்ததற்கு நன்றி என்று கூறி அவரது காலைத் தொட்டு கும்பிட்டார்.
அழுகை
நான் சீக்கிய பெண். எங்கள் சமூகத்தில் யார் காலையும் தொட்டுக் கும்பிட மாட்டோம். அதனால் காலைத் தொட்டு கும்பிட எனக்கு தெரியாது என்று டாப்ஸி கூறி ஷூஜித்தின் காலை தொட்டுக் கும்பிட்டார். உடனே ஷூஜித்துக்கு அழுகை வந்துவிட்டது.
வெற்றி
பிங்க் பற்றி வரும் நல்ல விமர்சனங்களை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. என்னை பாராட்டி பலர் எனக்கு ட்வீட் மற்றும் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி வருகின்றனர் என்று டாப்ஸி மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
பாராட்டு
பிங்க் படத்தில் மினால் அரோரா கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நன்றி என்றும், அதை பார்த்து தங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்றும் பலர் என்னிடம் தெரிவிக்கிறார்கள் என டாப்ஸி கூறியுள்ளார்.