Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதை மட்டும் செஞ்சா.. உங்க அமைதியை யாராலும் பறிக்க முடியாது.. யோகாவில் மூழ்கிப் போன இஷா குப்தா!
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா, யோகா டீச்சராகவே மாறி வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். தற்போது, அவர் யோகா புகைப்படத்துடன் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய நீண்ட பதிவையும் பதிவிட்டுள்ளார்.
இஷா குப்தாவின் யோகாசனங்கள் என புத்தகமே போடும் அளவுக்கு இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட வித்தியாசமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்து தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில், 5 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் அடைந்துள்ளதையும் இஷா குப்தா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற உடையில் பளபளக்கும் ஆத்மிகா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
மூச்சை கட்டுப்படுத்துதல்
யோகா முறைகளிலேயே மூச்சைக் கட்டுப்படுத்தும் பத்மாசனம் மிகவும் சிறந்த ஒன்றாகும். அப்படி ஒருவர் தனது மூச்சை கட்டுப்படுத்தி விட்டால் அவரது அமைதியை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது என்ற தத்துவத்துடன் யோகா செய்யும் புகைப்படத்தை நடிகை இஷா குப்தா பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
தனி வழி
சமூகத்தில் மற்றவர்கள் நடந்து செல்லும் பாதையை பின்பற்றியே நீங்களும் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கென ஒரு தனி பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நமக்கு தேவை என்பது மன அமைதி என்ற ஒன்று மட்டும் தான். கடந்த சில ஆண்டுகளாக எனது வாழ்வில் அடுத்தவர்கள் ஆட்சி செய்து மன அமைதியை குழைத்தனர்.
நண்பர்களாக நடிப்பார்கள்
அதில் சிலர் நண்பர்களாகவே நம்முடன் பழகி நம்மை ஏமாற்றுவார்கள். ஆனால், நாம் தான் முழு எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும், யார் நம்மை உற்சாகப்படுத்துவார்கள், நமக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையும், யார் நமது தோல்வியை குறித்து சந்தோஷப் படுகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கவலை வேண்டாம்
அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை முதலில் உங்கள் ஆழ் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். உங்களை பற்றி நீங்கள் சிந்திப்பது ஒருபோதும் சுயநலமாகாது. அடுத்தவர்களுக்கு நீங்கள் தீங்கு ஏதும் செய்யாமல் நல்ல முறையில் உங்கள் வாழ்க்கையை நடத்தி செல்லுங்கள், மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை செவி கொடுத்து கேட்டீர்கள் என்றால் மன அமைதி கெட்டுவிடும் என நடிகை இஷா குப்தா ஒரு தத்துவ ஞானியாகவே மாறி இந்த பதிவை போட்டுள்ளார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!