இரண்டு மாதங்களாக காணவில்லை... எங்கே போனார் குத்து ரம்யா.. தனித்தீவில் உள்ளாரா?
கடந்த இரு மாதங்களாக நடிகை குத்து ரம்யாவைக் காணவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த தகவல் தொடர்பும் இல்லையென்றும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தில் முன்னணி நடிகை.
கர்நாடக அரசியலிலும் குதித்து,காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் மனம் உடைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தார்.

‘ஆர்யன்' என்ற கன்னடப் படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் ரிலீசாகி விட்டது. அடுத்து புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். பிறகு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகுதான் அவரைக் காணவில்லையாம்.
ட்விட்டர், பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர் ரம்யா. கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அவர் எந்த தகவலும் பதியவில்லை.
அரசியல் நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் போன்றவற்றிலும் பங்கேற்கவில்லை. வீட்டில் விசாரித்தால் அவர் இல்லை என்ற பதிலே வருகிறது.
அவர் என்ன ஆனார் என்பது மர்மமாக உள்ளது. பொதுவாக அவர் திடீர் திடீரென ஏதாவது தீவுக்குச் சென்று தனிமையில் அல்லது பிடித்த நண்பர்களுடன் இருப்பார் என்று திரையுலகில் ஒரு தகவல் உலா வருகிறது. இந்த முறை அப்படி எங்காவது சென்றிருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications