Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அடுத்த 15 நாட்களுக்கு எந்த ரிசார்ட்டோ?: நடிகை ஸ்ரீப்ரியா
சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு ஹாலிடே ஸ்பாட் எது என்று நடிகை ஸ்ரீப்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் பதவியை அடைந்திட துடித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைத்தார்.
அவர் சிறைக்கு சென்றுவிட்டாலும் அங்கிருந்து கொண்டே தமிழகத்தை ஆட்சி செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார்.
எடப்பாடி
தமிழக சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க புதிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அதற்குள் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
|
ஸ்ரீப்ரியா
முதல்வருக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அடுத்த 15 நாட்களுக்கு எந்த ஹாலிடே ஸ்பாட்? என்று கேட்டுள்ளார்.
|
நியூஸ் சேனல்கள்
தமிழக பிரச்சனை முடிந்துவிட்டதாக தேசிய செய்தி சேனல்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனையே தற்போது தான் ஆரம்பிக்கிறது என்பது அவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் கூறுங்கள் மக்களே என்று ட்வீட்டியுள்ளார் ஸ்ரீப்ரியா.
சந்தேகம்
அடுத்த 15 நாட்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் எந்த ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுவார்களோ என்று மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ள நேரத்தில் அதை வெளிப்படையாக கேட்டுள்ளார் ஸ்ரீப்ரியா.