யாரை பார்த்து காப்பியடிக்கிறீர்கள் என்கிறீர்கள்?: ஆங்கில செய்தித்தாள் மீது சமந்தா கோபம்
சென்னை: முன்னணி செய்தித்தாள் ஒன்று தன்னை ஃபேஷனை காப்பியடிப்பவர் என்று கூறியதனால் நடிகை சமந்தா கடுப்பில் உள்ளார்.
நடிகை சமந்தா தெலுங்கு தவிர தற்போது தமிழிலிலும் பிசியாக உள்ளார். மேலும் அண்மையில் தெலுங்கில் வெளியான மனம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
இந்நிலையில் அவரை ஒரு செய்தி கோபம் அடைய வைத்துள்ளது.

காப்பி
முன்னணி ஆங்கில செய்தித்தாள் ஒன்று நடிகை சமந்தா பிறரை காப்பியடித்து ஃபேஷன் டிசைனர் உடைகளை அணிவதாக செய்தி வெளியிட்டது.

கோபம்
முன்னணி செய்தித்தாள் இப்படி தன்னை பிறரை பார்த்து காப்பியடித்து ஆடை அணிவதாக கூறியதை பார்த்து சமந்தா கோபம் அடைந்துவிட்டார்.

டிசைனர்
ஒரு டிசைனர் குறிப்பிட்ட கலெக்ஷனை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்ட நிறத்தில் பல ஆடைகளை தயாரிப்பார்கள். அனாமிகா கன்னாவின் தோத்தி அல்லது அர்பிதாவின் பிளவுஸ் ஒரு தனிப்பட்ட பிரபலத்திற்காக மட்டும் தயாரிக்கப்படுவது இல்லை. இவை கடைகள் மற்றும் ஆன்லைனிலும் கிடைக்கிறது என்று சமந்தா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாராட்டு
எனது ஆடைகளை தேசிய அளவிலான ஃபேஷன் பிளாக்குகள் பாராட்டியுள்ளன. இருப்பினும் பப்ளிசிட்டி அளித்ததற்கு நன்றி என்று சமந்தா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கத்தி" title="கத்தி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy" />கத்தி
சமந்தா தற்போது இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கத்தி படத்தில் நடித்து வருகிறார். அவர் விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











