Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அது யாரு சிம்ரன்?: இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகை
சென்னை: சிம்ரன் யார் என்று நடிகை சனா இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்டு அதிர வைத்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ரங்கூன் படத்தில் கவுதம் கார்த்திக், சனா பக்புல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த சனா மக்புல் படம் பற்றி கூறும்போது,
ராஜ்குமார்
ராஜ்குமார் சார் ஆடிஷனுக்காக மும்பை வந்திருந்தார். ஆடிஷன் பட்டியலில் என் பெயர் தான் கடைசியில் இருந்தது. நான் நடித்ததை பார்த்துவிட்டு அவர் கதாபாத்திரம் பற்றி விரிவாக பேசியபோதே அவருக்கு என் நடிப்பு பிடித்துவிட்டது என்று எனக்கு தெரிந்தது.
நடாஷா
ரங்கூன் படத்தில் வளர்ந்து வரும் பாடகி நடாஷாவாக நடித்துள்ளேன். குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண் நடாஷா. கவுதம் கார்த்திக் ஒரு ஸ்வீட் ஹார்ட்.
கவுதம்
கவுதம் கார்த்திக்குடன் நடித்தது நல்ல அனுபவம். அவர் நடிப்பில் எனக்கு உதவி செய்தார். அவருடன் சேர்ந்து நடித்ததை நான் என்ஜாய் செய்தேன். தமிழ் வரிகளுக்கு நான் வாயசைக்க இயக்குனர் குழு உதவி செய்தது.
சிம்ரன்
நான் சிம்ரனை நினைவூட்டுவதாக முருகதாஸ் தெரிவித்தார். இதையே தான் இயக்குனரும் என்னிடம் முன்பு தெரிவித்தார். என் நடிப்பு சிம்ரனை நினைவூட்டுவதாக ராஜ்குமார் சார் கூறினார்.
யார்?
எனக்கு சிம்ரன் பற்றி அப்போது தெரியாது. அதனால் என்னை பாராட்டுகிறீர்களா என்று ராஜ்குமார் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் திரையுலகை 10-15 ஆண்டு காலம் ஆண்டவர் சிம்ரன் என்றார். இதை விட எனக்கு பெரிய பாராட்டு வேறு எதுவும் இருக்காது என்கிறார் சனா.