யாருப்பா அது த்ரிஷா வேனிட்டி வேனில் அனுமதி இல்லாமல் நுழைந்தது?
சென்னை: நடிகை த்ரிஷாவின் வேனிட்டி வேனுக்குள் அணில் ஒன்று புகுந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

நடிகை த்ரிஷா ஒரு விலங்கு பிரியை என்பது அனைவருக்கும் தெரியும். தன்னை போன்று பிறரையும் விலங்குகள் மீது பாசம் காட்டுமாறு வலியுறுத்தி வருகிறார் அவர். இந்நிலையில் படப்பிடிப்பில் த்ரிஷாவின் வேனிட்டி வேனுக்குள் திடீர் என ஒரு குட்டி அணில் புகுந்தது.
அணில் குட்டியை பார்த்த த்ரிஷா உற்சாகமாகி அதை தனது தோளில் போட்டு கொஞ்சினார். அதை அவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அணிலுக்கு லோலா என்று பெயர் வைத்துள்ளார் த்ரிஷா.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் வேனிட்டி வேனுக்கு யார் வந்தார்கள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். லோலா என்ற குட்டி அணில்... என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











